பதுளையில் தீ விபத்து: 2 லயன் குடியிருப்புகள் சேதம்; 4 குடும்பங்கள் இடம்பெயர்வு

பதுளை – ஹாலிஎல, உனுகலை தோட்டத்தின் மொரகலை பிரிவில் உள்ள 3 ஆம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

இத்தீ விபத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், தற்காலிகமாக மொரகலை தமிழ் வித்யாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் ஆனந்தராஜ் பாபு மற்றும் ஹாலிஎல பிரதேச சபை உறுப்பினர் திரு. செல்வகுமார் ஆகியோர் நிலைமைகளைப் பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக அரச அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

செய்தி -ஊவா சுரேன்

Related Articles

Latest Articles