லுணுகலை தொரபொத்த வனப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்ந்த மூவர் கைது!

லுணுகலை, தொரபொத்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேரை லுணுகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை மற்றும் எட்டம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தொரபொத்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து, அப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அகழ்வு வட்டி, இழ்லன் கம்பிகள், மண்வெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பதுளை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹண, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (I) வேஹித தேசப்பிரிய, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (II) அஜித் பண்டார மற்றும் லுணுகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.எம். அபேபால ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

உப பொலிஸ் பரிசோதகர் விக்ரமசிறி, பொலிஸ் சார்ஜன்ட்கள் பிரேமரத்ன (35363), பண்டார (13592), நவரத்ன (31017) மற்றும் கருணாரத்ன ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் பசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

த.டிமேஷன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles