நேபாளத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: சிறப்பு ட்ரோன் குழுவை அனுப்புகிறது ஆஸ்திரேலியா

 

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுமார் 4,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

இந்தச் சூழலில், அங்கு மனிதநேய உதவிகளை விரைவுபடுத்தியுள்ள ஆஸ்திரேலியா, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகச் சிறப்பு ட்ரோன் நிபுணர்களை அனுப்பவுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் Penny Wong தெரிவிக்கையில்,

“இந்த பேரழிவின் தீவிரத்தை நாம் அனைவரும் ஊடகங்கள் வழியாகக் காண்கிறோம். நேபாள அதிகாரிகள் சுமார் 20,000 பேரை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுவரை 38 ஆஸ்திரேலியர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர்களைப் பற்றிய கவலைகள் ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகிறது” எனக் கூறினார்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவத்திற்கு உதவ 15 பேர் கொண்ட சிறப்பு ட்ரோன் இயக்கும் குழுவை ஆஸ்திரேலிய அரசு அனுப்பவுள்ளது.

இக்குழுவில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து தீயணைப்புத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளதாக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே 19 ஆஸ்திரேலிய அதிகாரிகள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இவர்கள் அடுத்த சில நாட்களில் அங்கு விரைவர்.

அதிநவீன ட்ரோன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, வெப்ப நிலப்படவியல் (thermal imaging) மற்றும் நிலவரைபடச் சேவைகள் (mapping) மூலம் மீட்புப் பணிகளுக்கு உதவ உள்ளதாக பென்னி வோங் குறிப்பிட்டார்.

“தகவல்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளைச் சென்றடைவது கடினமாக உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமல் போன ஆஸ்திரேலியர்கள் தங்கியிருந்ததாகக் கருதப்படும் ‘ஹோட்டல் கைலாஷ்’ மற்றும் ‘ஹோட்டல் ராயல் ஹிமாலயா’ ஆகிய பகுதிகளில் நேபாள ராணுவம் ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் உதவியுடன் தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. மேலும், ஆஸ்திரேலியர்களின் கடைசி இருப்பிடத்தைக் கண்டறியும் வகையில், தொலைத்தொடர்புத் தரவுகளையும் நேபாள அதிகாரிகளுக்கு ஆஸ்திரேலியா வழங்கி வருகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles