இலங்கைக்கான இலங்கைக்கான புதிய சீன தூதர் வேய் ஹுவாசியாங்கிற்கும் (Wei Huaxiang) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான நட்புரீதியான சந்திப்பொன்று நேற்று (09) கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்து, இலங்கைக்கான சீனத் தூதராகப் பொறுப்பேற்றுக்கொண்ட வேய் ஹுவாசியாங்கிற்கு மஹிந்த ராஜபக்ச தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.










