பசறை பகுதியில் மேலும் 10 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பசறை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கடந்த 25 ஆம் திகதி 215 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் அறிக்கையின்படி குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் பாடசாலை மாணவர்களும், கொழும்பிலிருந்து வருகைத் தந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களும் அடங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓரிரு வாரங்களில் பசறை பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்திருப்பது அவதானிக்க முடிகிறது.
இதனால் பொதுமக்கள் தொற்றிலிருந்து பாதுகாப்புபெறுவதற்கான உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸாரும் பொதுசுகாதார அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நடராஜா மலர்வேந்தன்
