கம்பனிகளின் கொட்டத்தை அடக்க ஒன்றிணைவோம்! அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் இ.தொ.கா. அழைப்பு!!

கம்பனிகளால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்கமுடியாது. அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கம்பனிகளுக்கு பலத்தைக்காட்டுவோம் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தொழில் அமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறினார்.

” இன்றைய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் தென்பட்டாலும், கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலத்தை 4 வருடங்களாக்க வேண்டும் என கம்பனிகள் வலியுறுத்துகின்றனர். அத்துடன், மேலதிகமாக இரண்டு கிலோ கொழுந்து பறிக்கவேண்டும் எனவும் கூறப்பட்டது. இவற்றை ஏற்கமுடியாது.

எனவே, சம்பள நிர்ணயச் சபை சம்பளத்தை நிர்ணயிக்கட்டும் என அறிவித்தோம். 6 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு சம்பள நிர்ணயச்சபை கூடவுள்ளது.

மக்கள் ஒற்றுமையாக இல்லை என நினைத்தே கம்பனிகள் ஆடுகின்றன. எதிர்தரப்பையும் இணைத்து இது விடயத்தில் பலத்தைக்காட்டி, கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles