ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்னவென எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
” பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த அவரைத்தவிர வேறு எவருமிருக்கின்றனரா என்று நான் நினைக்கவில்லை. எதிர்க்கட்சியை
வழிநடத்த அவர் மிகவும் பொருத்தமானவர். எனது நண்பர் என்பதற்காக அவ்வாறு கூறவில்லை. அரசியல் ரீதியாகப் பார்த்தால் அவரே பொருத்தமான நபர்.
அவரது பிரசன்னம் அரசாங்கத்துக்கு பாதகமானது. ஒரு வலுவான எதிர்ப்பு எப்போதும் தேவை என்று நான் நம்புகின்றேன். தற்போதைய எதிர்ப்பு பயனளிக்கவில்லை.” – என்றும் மஹிந்த கூறினார்.
