‘கொரோனா’வால் பதுளை மாவட்டத்தில் இதுவரை நால்வர் பலி!

பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் நால்வர் இதுவரை பலியாகியுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு ஆடைத்தொழிற்சாலைகளும் மறுஅறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆம் திகதி முதல் இதுவரையில் பதுளை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மொத்தமாக 584 பேர் கொரோனா தொற்றாளர்களாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட் 19தடுப்பு செயலணியினர் தெரிவித்தனர்.

வெலிமடையில் ஒரு மரணமும், தியத்தலாவையில் இரு மரணங்கள், மகியங்கனையில் ஒருமரணம் உள்ளிட்டு நான்கு பேர், கொரோனா தொற்றினால் மரண மாகியுள்ளனர்.

மகியங்கனைப் பகுதியில் இரு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

எம். செல்வராஜா

Related Articles

Latest Articles