தீ விபத்தால் சேதமடைந்த வத்தளை , ஹேகித்த முருகன் கோயிலின் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆவணத்தை இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், ஆலய நிர்வாக சபையினரிடம் கையளித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய இந்து கலாசார அமைச்சினால் குறித்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.












