‘கொரோனா’ அபாய வலயத்தில் வசிப்பவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி!

மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியேற்றும் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த செயற்பாடுகள் இன்று  திங்கட்கிழமை  முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
 
பாதிக்கப்படக்கூடியவர்கள், அதிக ஆபத்துள்ள குழுக்கள் மற்றும் பொதுமக்களுடன் நெருக்கமாக பழகும் நபர்களை குறிவைத்து 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles