கொரோனா வைரஸ் தொற்றால் நுவரெலியா மாவட்டத்திலுள்ள, அக்கரப்பத்தனை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கடும் காய்ச்சல் காரணமாக அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் இவர் கடந்த ஏழு நாட்களாக சிகிச்சைபெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் நேற்று நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன்படி நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அக்கரப்பத்தனை வைத்தியசாலையும் மூடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் இருந்தவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி – நீலமேகம் பிரசாந்த்
