இம்முறை (மார்ச் 01) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பெப்ரவரி 17 முதல் கற்கை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெப்ரவரி 23 நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய கொவிட் 19 நெருக்கடியினால் பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளையும் இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
#GCEOL #LKA #SL