” இந்தியாவின் பாரதிய ஜனதாக்கட்சி, இலங்கையிலும் நிறுவப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அமித்ஷா கூறினார் என்றே தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அவர் கூறினார் என்பதற்கான உரிய ஆதாரம் இல்லை. எனவே, கட்டுக்கதைகளுக்கு பதிலளிக்கவேண்டிய தேவை இல்லை. உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானால் அதற்கு உரியவகையில் பதில் வழங்கப்படும்.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான உதயகம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அமித்ஷா கூறினார் என்றே மாநில முதல்வர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அமித்ஷா அவ்வாறு கூறினாரா என்பதற்கான உரிய ஆதாரம் இல்லை. இல்லாத ஒரு விடயத்துக்கு அரசின் பதிலை வழங்கமுடியாது. அத்துடன், வெளிநாட்டு கட்சிகளின் கிளையை எமது நாட்டில் நிறுவமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
