80 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 257  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவிலிருந்து 73 ஆயிரத்து 546 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 305  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 433 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles