அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க எம்.பி.க்களை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மார்ச் முதல் வாரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பிலேயே இதன்போது முக்கியமாக ஆராயப்படவுள்ளது.
மார்ச் 2 ஆம் திகதி இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கின்றது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கத்தோலிக்க எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
21/4 தாக்குதல் தொடர்பில் நீதி கிடைக்காவிட்டால் தான் சர்வதேசத்தை நாடுவேன் என்று பேராயர் நேற்று அறிவித்திருந்தார். அத்துடன், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவையும் அவர் நிராகரித்தார்.
