‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் சிகிச்சைப்பெறும் வைத்தியசாலைகளிலுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவமும், பொலிஸாரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் கிசிச்சைபெற்றுவந்த கொரோனா நோயாளியொருவர் நேற்று தப்பிடியோடியதால் கொழும்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் சில இடங்களுக்கு சென்றுவந்த பிறகே தேசிய வைத்தியசாலைக்கு அருகில் வைத்து சிக்கினார்.
இந்நிலையிலேயே நோயாளிகள் எவரும் தப்பியோடாத விதத்திலும், சமூகத்தின் பாதுகாப்பு கருதியும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.