நாட்டில் மேலும் ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 826 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவிலிருந்து இதுவரை 99 ஆயிரத்து 153 பேர் குணமடைந்துள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். கொரோனாவால் 709 பேர் உயிரிழந்துள்ளனர்.










