மின்னல் தாக்கி கொட்டகலையில் 17 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வனர்த்தம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த போதே இந்த அனரத்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும் இவர்கள் மின்னல் தாக்கத்தினால் தூக்கி வீசப்பட்டதாகவும் அதிர்ச்சியின் காணமாகவும் உராய்வு காயங்கள் காரணமாகவும் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவித்தன.

நமது நிருபர்கள்

Related Articles

Latest Articles