நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹங்குராங்கெத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேருக்கும், ஹட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும், நோட்டன் பிரிட்ஜ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 54 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும், உடபுஸல்லாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை நுவரெலியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 214 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










