சீனாவிடமிருந்து அடுத்தவாரம் மேலும் 10 லட்சம் தடுப்பூசிகள்!

சீனாவிடமிருந்து மேலும் 10 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் இன்று காலை இலங்கை வந்தடைந்தன.

இலங்கைக்கு ஒரே தடவையில் அதிகளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இலங்கைக்கு ஏற்கனவே சுமார் 11 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகளை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இதனையடுத்து மேலும் 2 மில்லியன் தடுப்பூசிகளை விலைக்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்தது. இதன் முதற்கட்டமாகவே 10 லட்சம் தடுப்பூசிகள் இன்று வந்தடைந்தன.

அடுத்த 10 லட்சம் தடுப்பூசிகள் அடுத்தவாரமளவில் கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

Related Articles

Latest Articles