கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார்.
33 ஆண்களும், 22 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது.