காலை வாரினார் ரணில் – சஜித் பக்கம் தாவுகிறார் ஜோன்! கசிந்தது ஆதாரம்!!

” பொதுத்தேர்தலில் போட்டியிட இருந்தேன். எனினும், தேசியப்பட்டியல் நியமனம் என கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். இதன்படி தேசியப்பட்டியலில் எனது பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஏமாற்றிவிட்டார்.

தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்கப்படாது என ரணில் அறிவித்திருந்தார். எனினும், அதற்கு எதிரான வகையில் தற்போது முடிவெடுத்துள்ளார். அரசியலே எனக்கு வெறுத்துவிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் எதிர்காலத்தில் பார்க்கலாம். “

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles