பார்ஸிலோனா உதைபந்தாட்ட கழகத்திலிருந்து அண்மையில் விடைபெற்றுக்கொண்ட ஆர்ஜன்டீனிய உதைபந்தாட்ட நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி தனது பிரியாவிடை அறிவிப்பின்போது உடைந்து அழுதார்.
பேச முடியாமல் அவர் மேடையில் அழுதுகொண்டிருந்தபோது கண்ணீரை துடைப்பதற்கு அவரது மனைவி மென் கடதாசியை எடுத்துக்கொடுத்தார். இந்த அறிவிப்பு நிகழ்வு நிறைவடைந்த பிறகு, மெஸ்ஸி தனது கண்ணீரைத்துடைத்த மென்கடதாசிகளை சேகரித்து எடுத்த நபர் ஒருவர், அவற்றை ஏலமிட்டுள்ளார்.
அந்தக்கடதாசிகளுக்கு அவர் ஏலமிட்டுள்ள தொகை 10 லட்சம் டொலர்கள்.
மெஸ்ஸி அழுத கண்ணீரை ஒற்றியெடுத்த அந்த மென் கடதாசியில் மெஸ்ஸியின் மரபணு இருப்பதாகவும் அந்த மரபணுவிலிருந்து மெஸ்ஸியைப்போன்ற அதி சக்திவாய்ந்த உதைபந்தாட்ட வீரரை உருவாக்கமுடியும் என்றும் குறிப்பிட்ட நபர் தனது ஏலத்திற்கு அடைமொழிகளை இணைத்திருக்கிறார்.










