அதிபர் – ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களுடன் எந்நேரத்தில் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயார் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று சபையில் தெரிவித்தார்.
அத்துடன், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டம் ஊடாக தீர்வு முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
