தலைமுடி உதிர்வை தடுத்து நிறுத்தும் இஞ்சி

முடி உதிர்வு பிரச்சனை தான் இப்பொழுது பெரும்பிரச்சனையாக உள்ளது, முதலில் அதனை தீர்க்க, ஒரு இஞ்சி துண்டை எடுத்து, தலையில் நேரடியாக உச்சரந்தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் தேய்தால் போதுமானது. பின் 10 -15 நிமிடம் கழித்து தலைமுடியை நன்கு அலச வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்கையில் முடி உதிர்வு முழுவதுமாக நின்றுவிடும்.

பொடுகு தொல்லை நீங்க

இஞ்சி சாற்றால் தலையில் மசாஜ் செய்யும் போது அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை, ஸ்கால்பில் சுரக்கும் எண்ணெயின் அளவைக் குறைத்து, பொடுகை தடுக்கிறது.

கண்ணாடி போன்று தலைமுடியைப் பெற

பொலிவான தலைமுடிக்கு, இஞ்சி சாற்றுடன் கொஞ்சம் ஒலிவ் ஆயில் சேர்த்து, தலையில் தடவி 1 மணி நேரம் ஊறவைத்து, பின் ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.

வறட்சியான முடியை போக்க

உங்க தலை முடி வறண்டு இருக்கும் போது, இஞ்சி சாறுடன் ஆர்கன் ஆயிலை கலந்து தலைமுடியில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து, குளிக்கும் போது தலை முடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.

Related Articles

Latest Articles