அரசுக்குச் சொந்தமான உர நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட சேதன பொட்டாசியம் குளோரைட் பசளை இன்று (13) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்படி 30,000 மெட்ரிக் தொன் சேதன பொட்டாசியம் குளோரைட் பசளை, கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.










