மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மதியுகராஜா வலியுறுத்து

தேர்தல் என்பது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை. வருடக்கணக்கில் தடைப்பட்டு வருகின்ற மாகாண சபைத் தேர்தல்களை மென்மேலும் தாமதப்படுத்திக் கொண்டிருப்பது ஜனநாயக செயற்பாடுகளின் அடிப்படையை வேறுப்பதாகும் .

அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் நலன் என்பவற்றின் இப்பொறி முறை செயற்பட வேண்டும் . ஆனால் மாகாண சபைப் பொறிமுறையில் இன்று மக்கள் பிரதிநித்துவம் முடக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக உள்ளது என முன்னாள் மத்திய மாகாண சபை அவைத்தலைவர் துரை மதியுகராஜா மேலும் தெரிவித்துள்ளார் .

மத்திய மாகாண சபை கலைக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன. அதேபோல் கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆகின்றன . சிறு பான்மை மக்கள் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு பொறிமுறையாக மாகாண சபைகள் கொண்டு வரப்பட்டன .

சகல அதிகாரங்களும் ஆளுநர் கையிலும் செயலாளர்கள் கையிலும் தங்கியுள்ளது . மக்கள் பிரதி நிதிகள் இல்லாத நிலையில் அநீதிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு . இந்நிலையானது மலையக மற்றும் வடக்கு , கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூககங்களுக்கு பாரிய இழப்பாகக் கருத முடியும் .

அனால் 13 வது திருத்தத்தின் அதிகாரங்கள் முற்றாக ஆளுநர்களின் கைகளிலே தங்கியுள்ளன . பரந்து விரிந்து வாழும் சிறுபான்மையினருக்கு விகிதாசார முறையே பொருத்தமானதாகும் . கலப்பு முறையில் தேர்தல் நடத்தினாலும் ஒப்பீட்டளவில் மலையகப் பிரதேசங்களில் அல்லது வடக்கு , கிழக்கிற்கு வெளியே உள்ள சிறுபான்மையினனரின் பிரதிநித்துவம் குறையும் வாய்ப்பு உண்டு .

Related Articles

Latest Articles