நடிகை நயன்தாரா தனது காதலர், இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார்.
இவர் தயாரிப்பில் தற்போது கூழாங்கல் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
வினோத்ராஜ் என்பவர் இயக்கியுள்ள இப்படம் ஏற்கனவே சிறந்த படத்திற்கான பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது.
இந்நிலையில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க கூழாங்கல் தேர்வாகியுள்ளது.
இதற்காக திரையுலக பிரபலங்களும், ரசிகர்களுக்கும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.