சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் களுத்துறை, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, குருநாகலை மற்றும் காலி ஆகிய 8 மாவட்டங்களுக்கே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராச்சி நிறுவகம் அறிவித்துள்ளது