அதிபர், ஆசிரியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தில் பங்கேற்ற இளம் ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
தெனியாய,கொட்டப்பொல பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்த 27 வயதுடைய ஆசிரியை ஒருவரே திடீரென மயங்கி விழுந்து இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த குறித்த ஆசிரியைக்கு 13 வயதில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.