மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள 150 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தனிவீடு – அரவிந்தகுமார்

பதுளை பகுதியின் வேவஸ்சை, கிளன் அல்பின், தெளிவத்தை போன்ற பெருந்தோட்டங்களில் மண்சரிவு அபாயங்கள் எதிர்நோக்கப்பட்ட பகுதிகளில், வாழ்ந்து வரும் 150 குடும்பத்தினருக்கு, பாதுகாப்பபான இடங்களில் தனி வீடுகளை நிருமாணிக்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி, மூன்று பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்றிருக்கும், பலாங்கொடை பிளான்டேசன் நிறுவன நிறைவேற்று அதிகாரி மற்றும் குறிப்பிட்ட தோட்டமுகாமையாளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் அனுப்பியுள்ள கடிதங்களிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இக்கடிதங்களின் பிரதிகள் பதுளை மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலாளர் இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அக் கடிதங்களில்’ வேவஸ்சை பெருந்தோட்டத்தில் மண்சரிவு அபாயப் பிரதேசத்தில் 63 குடும்பங்கள் வாழ்ந்து வந்த போதிலும், 25 குடும்பங்களுக்கு மட்டுமே, பாதுகாப்பான இடங்களில் காணித்துண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 38 குடும்பங்களுக்கு, காணித்துண்டுகள் ஒதுக்கப்படவில்லை. ஆகவே, இவர்களுக்கான காணித்துணடுகள் விரைவில் ஒதுக்கப்படல்வேண்டும்.

கிளன் அல்பின் பெருந்தோட்டத்தில் மண்சரிவு அபாயப்; பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 38 குடும்பத்தினருக்கான பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கான காணித்துண்டுகள் பலகல தோட்டப்பிரிவின் 26ம் இலக்கப் பகுதியில ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இக் காணித்துண்டுகள் வீடுகள் நிருமாணிப்பதற்கு உகந்ததல்லவென்று, தேசிய கட்டிட ஆய்வக அமைப்பு தெரிவித்துள்ளது. ஆகையால், வீடுகள் நிருமாணிப்பதற்கு உகந்தவகையில் காணித்துண்டுகளை, விரைவில் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தெளிவத்தை பெருந்தோட்டத்தில் மண் சரிவு அபாயப் பிரதேசத்தில் 53 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இப் பட்டியலில் 17 குடும்பத்தினருக்கு, அரசின் நிதி உதவியுடன் வீடுகள் நிருமாணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மிகுதியுள்ள 36 குடும்பத்தினருக்கு ‘வெஸ்மோலேன்ட பிரிவில் வீட்டுத்திட்டத்திற்கென காணித்துண்டுகள் தோட்ட முகாமைத்துவத்தினால் இனம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மேற்படி பெருந்தோட்டங்களி மண் சரிவு அபாயங்கள் எதிர்நோக்கபட்ட பகுதிகளில், வாழ்ந்து வரும் 150 குடுபத்தினருக்கு பாதுகாப்பான இடங்களில், தனி வீடுகளை நிருமாணிக்க, இடர் முகாமைத்துவ அமைச்சு, தேவையான நிதியினையும் ஒதுக்கியுள்ளது. ஆகவே, குறிபிட்ட பெருந்தோட்டங்களில் மண் சரிவுகளுக்குட்படாத வகையிலான காணித் துண்டுகளை ஒதுக்கித்தருமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேவஸ்சைஇ கிளன் அல்பின், தெளிவத்தை ஆகிய பெருந்தோட்டங்களின் தோட்ட முகாமையாளர்களுக்கு தனித் தனியாகவே கடிதங்கள், பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரினால் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles