மீண்டும் வேகமாக பரவும் கொரோனா! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தொடர்ச்சியாக கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் தொகையும் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக திருமண வைபவங்கள், மரண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் காரணமாகவே வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றாது மக்கள் அலட்சியம் காட்டி வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலை தொடருமானால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அதனால் மக்களே பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது

கடந்த இரண்டு தினங்களாக புதிய வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 700ஐத் தாண்டியுள்ள நிலையில் நேற்றைய தினம் அது 718 ஆக அதிகரித்துள்ளதாகவும் மரணங்களின் தொகை கடந்த 2 தினங்களாக இருபதைக் கடந்துள்ளதாகவும்அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடத்த வாரத்தோடு ஒப்பிடுகையில் இந்த வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் மரணங்களும் அதிகரித்துள்ளன.

அதற்கிணங்க நாட்டில் இதுவரை மொத்தமாக 5 லட்சத்து 49 ஆயிரத்து 500 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 503 பேர் பூரண குணமடைந்து ள்ளதாகவும் மேலும் 12,025 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மரணங்களை பொருத்தவரையில் கடந்த 13ஆம் திகதி 23 மரணங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அதற்கு முன்தினம் இருபத்தி மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும்

அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க நாட்டில் இதுவரை குரு நான் வைரஸ் தொற்று காரணமாக 13, 972 பேர் மரணம டைந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles