லண்டனில் தீயில் சிக்கி பலியான தமிழ் குடும்பம் (படங்கள்)

தென் கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லேஹீத் (Bexleyheath) பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீப்பரவலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

நிரூபா என்ற பெண்ணும் அவரது தாயாரும் ஒரு வயது பெண் குழந்தையான ஷஸ்னா மற்றும் 4 வயது ஆண் குழந்தையான தபீஷ் ஆகியோரே இந்தச் சம்பவத்தில் பலியானதாக அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 அளவில் ‘தமது வீட்டில் தீப்பரவி இருப்பதாக’ நிரூபா தொலைபேசி அழைப்பை எடுத்து அவரது கணவரான யோகன் தங்கவடிவேலுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்குப் பிரவேசித்து தீயை அணைத்து வீட்டுக்குள் நுழைந்து அவர்களை மீட்க முயற்சித்தபோதும் அவர்கள் ஏற்கனவே இறந்து இருந்தமை தெரியவந்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பே அவர்கள்குறித்த கட்டடத்துக்குக் குடி பெயர்ந்துள்ளனர்.

அந்தக் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த தீயை எச்சரிக்கும் கருவி தொழிற்படாமையே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம் சம்பவத்தின்போது குறித்த கட்டடத்திலிருந்து குதித்து உயிர் தப்பிய நிரூபாவின் மைத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles