இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு அத்தியாவசியம்!

” எமது அயல் நாடானா இந்தியாவுடனான நல்லுறவென்பது இலங்கைக்கு அத்தியாவசியம். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் அடித்தளமாகக்கூட இந்த விடயத்தைக் கருதலாம்.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அணிசேராக் கொள்கை தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமற்றது என்ற கருத்தை நல்லாட்சியின் வெளிவிவகார அமைச்சர் முன்வைத்திருந்தார். அந்த கருத்துடன் உடன்பட முடியாது. நாம் அனைத்து நட்பு நாடுகளுடனும் சிறந்த நட்புறவை பேணிவருகின்றோம். ஒரு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் மற்றைய நாட்டுடன் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடும் கொள்கையென்பது எமது வெளிவிவகாரக் கொள்கைக்கு எதிரான விடயமாகும்.

எமது அயல்நாடான இந்தியாவுடனான நல்லுறவென்பது எமக்கு அத்தியாவசியம். இலங்கையின் வெளிவிவகார் கொள்கையின் அடித்தளமாகக்கூட இதனை கருதலாம். இரு நாடுகள், இரு அரசுகளுக்கு இடையில் மட்டுமல்ல இரு நாடுகளின் மக்களுக்கிடையிலும் சிறந்த நல்லுறவு உள்ளது.

பௌத்த கலாச்சாரத்துடன் தொடர்புடைய குஷி நகர் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு, திறந்துவைக்கப்பட்டது. எமது நாட்டில் இருந்து 100 பிக்குகள் சென்ற விமானமே முதலில் தரையிறங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்திருந்தார். ஸ்கொட்லாந்தில் பாரத பிரதமரை சந்தித்தபோது அதற்காக நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டேன். இந்தியாவின் பிராந்தியங்களுடனும் நாம் கொடுக்கல், வாங்கல்களிலும் ஈடுபட்டுவருகின்றோம்.

சீனாவும் எமக்கு அதிக உதவிகளை வழங்கும் நாடு. இலங்கையின் ஏற்றுமதியில் பெரும்பங்கு மேற்குலகமே செல்கின்றது. ஆபிரிக்க நாடுகளுடனான உறவை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் நாம் முன்னெடுத்தபோது சிரித்தனர். புதிய நாடுகளுடனான தொடர்புகள் அவசியம். ஆக ஒரு வட்டாரத்துக்குள் மட்டும் இருக்காது, அனைத்து நட்பு நாடுகளுடன் நாம் சிறந்த நல்லுறவை பேணுவோம்.

அதேவேளை, ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டகுழு எமது நாட்டுக்கு வந்தது. என்னையும் சந்தித்து கலந்துரையாடினர்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளன். பேச்சுகள் தொடர்கின்றன. எனவே, ஜி.எஸ்.பி. பிளஸ் விடயத்தில் சிக்கல் வராது என்றே நம்புகின்றேன்.”- என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles