துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொரள்ள பகுதியில் வைத்து கடுவலை பொலிஸாரினால் அவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles