நாட்டில் கடந்த 5 நாட்களில் 1,221 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

இந்த வருடத்தின் கடந்த 5 நாட்களில் 1,221 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், முதல் முறையாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் மூன்றாவது வகையினரும் தற்போது அடையாளம் காணப்படுவதாக வைத்தியர் அனோஜா வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles