இலங்கை அரசு, ரஷ்யாவிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை கோரியுள்ளது.
இது தொடர்பான கோரிக்கை ரஷ்ய ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
மசகு எண்ணெய், எரிவாயு மற்றும் மேலும் சில பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே மேற்படி கடன் கோரப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடும் போர் மூண்டுள்ளது. இதற்கு மத்தியிலேயே இலங்கை கடனும் கோரியுள்ளது.










