எரிபொருள் நெருக்கடி, தொடர் மின்வெட்டு மற்றும் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் , அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் கொட்டகலை நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொட்டகலை வர்த்தக சங்கம் , சாரதிகள் சங்கம் , முச்சக்கர வண்டி நலன் புரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில், மக்களும் பங்கேற்றிருந்தனர்.










