இரத்தினபுரி கோவில் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த ஜீவன்!

” இரத்தினபுரி, சென் ஜோக்கிம் ஆலயத்திற்கு சொந்தமான கட்டிடம் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அதற்கான தீர்வினை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று பெற்றுக்கொடுத்துள்ளார்.”

இ.தொ.காவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இரத்தினபுரி, புனித ஜோக்கிம் ஸ்ரீ முத்துமாரி அம்மான் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தினை அகற்றுவதற்கு சில சூழ்ச்சிகள் நடைபெறுவதாக ஆலய பரிபாலன சபை மற்றும் இளைஞர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அவர் இவ்விடயம் குறித்து தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு அறிவித்தததையடுத்து, ஜீவன் தொண்டமான் , ஆலய நிர்வாக சபையை அழைத்து கலந்துரையாடி, இவ்விடயம் குறித்து பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் உரையாடி வேண்டுகோள் விடுத்தார்.

அதனை தொடர்ந்து, ஆலய பரிபாலன சபையினர் சகிதம் நேரில் சென்று பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கேட்டுக்கொண்டதற்கமைய குறித்த கட்டிடத்தை புனித ஜோக்கிம் ஸ்ரீ முத்துமாரி அம்மான் ஆலயத்தின் நடவடிக்கைகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட தேவைகளை வேறு இடத்தில் அமைக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது எனவும் ரூபன் பெருமாள் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles