ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தை மேலும் குறைக்க கூடியதாக இருக்கும் என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது. 16 , 17 ஆம் திகதிகளில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுலாகும். 18 ஆம் திகதி முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் அவர் கூறினார்.
