‘சிங்கராஜா வனாந்தர எல்லைகளில் தேயிலை செய்கை வேண்டாம்’

சிங்கராஜா வனாந்தர எல்லைகளில் தேயிலை செய்கை மற்றும் காடழிப்புக்களில் ஈடுபட வேண்டாம் என்று பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கராஜா எல்லை கிராமங்களில் இடம்பெற்ற மரம் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வெளிநாட்டவர்கள் ஆதிக்க காலத்தில் நாட்டில் இருந்த இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு நாசமாக்கப்பட்டன. இப்பிரதேசத்தில் உள்ள காணிகளின் பிரதான உரிமை சிங்கராஜா வனத்திற்குரியதாகும்

1818 களில் இலங்கையை ஆண்ட வெளிநாட்டு சக்திகள் நாட்டிலுள்ள பல இலட்சம் மரங்களை வெட்டி சாய்த்தனர். இவ்வாறு வெட்டியழிக்கப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 10 மரங்களை நடுவதே எனது இலட்சியமாகும். நீர்நிலைகளை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை நீ ர் விநியோக திணைக்களத்துக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கவுள்ளேன்.

சிங்கராஜா வனத்தின் வளம் மிக்க பிரதேசங்களில் நீர் நிலைகள் வற்றிக்காணப்படுகின்றன. காடுகளை துப்புரவு செய்வதும் நீரை வெளியே எடுத்துச் செல்வதும் இந்நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நீரின் பெறுமதியை உணர்ந்து நாம் எமது பகுதிகளில் மிகுதியாக உள்ள மேலதிக நீரை கஷ்டப்படும் மக்களுக்கு முறையான விதத்தில் வழங்குவதற்கு கருணை காட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles