இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளை அதிகரிக்க நடவடிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டிய பாடசாலைகள் தொடர்பில் பிரதேசத்தின் அரசியல் அதிகார சபையினை அறிவுறுத்துமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சி சப்ரகமுவ மாகாண கல்வி பணிப்பாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகுபோதாகமவின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் 9 பிரிவுகளில் தேசிய பாடசாலைகள் எதுவும் இல்லை. பௌதீக மற்றும் மனிதவளம் உரிய முறையில் அபிவிருத்தி அடைந்துள்ள பாடசாலைகள் இல்லாமையால் அந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. கிராமப்பகுதிகளில் கஷ்டங்களுக்கு மத்தியில் மாணவர்கள் கல்விகற்கின்றனர். அவர்களின் தேவைகளுக்காக இந்த பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்குரிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வது மிக முக்கியமாகும்.

இதுதொடர்பில் பதில் அளித்த சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் சேபால குறுப்புஆரச்சி தெரிவித்ததாவது,

கல்வி அமைச்சின் மூலம் ஒன்லைன் முறைக்கு தொடர்புப்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பாடசாலைகளின் தகவல்களை சேகரித்தோம். அதற்கமைய பல பாடசாலைகளில் பெயர்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. வலய மட்டத்தில் காவத்தை மத்திய வித்தியாலயம், அயகம ஸ்ரீ ராகுல வித்தியாலயம், எலபாத மகா வித்தியாலயம், குருவிட மத்தியவித்தியாலயம், வெலிகேபொல சித்தார்த்த மகா வித்தியாலயம் உட்பட மேலும் பல பாடசாலைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்ட பாடசாலைகள் தொடர்பாக அரசியல் அதிகார சபையில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சி உட்பட நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் மாவட்ட அபிவிருத்தி கமிட்டியின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவள சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் வலியுறுத்தினர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles