” மொட்டு கட்சிக்கு அமைச்சரவையில் உரிய இடம் அவசியம்” – சாகர

“செயற்பாட்டு அரசியலுக்கு வருவது தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவே முடிவெடுக்க வேண்டும். அதற்கான சுதந்திரம் அவருக்கு உள்ளது. அத்துடன், கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறும், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளோம்.

நாடு திரும்பும் ஜனாதிபதி, அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு அறிவிக்க முடியாது. அது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கே உள்ளது.

அதேவேளை, மொட்டு கட்சிக்கு உரித்தான அமைச்சு பதவிகள் உரிய வகையில் கிடைக்கப்பெற வேண்டும். அது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles