நீர் கட்டணமும் எகிறியது!

நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (26) வௌியிடப்பட்டது.

இதற்கிணங்க, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், மாதாந்த நீர் பாவனை கட்டணம் 70 வீதமாகவும் மாதாந்த சேவை கட்டணம் 50 ரூபா முதல் 300 ரூபா வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் 15 அலகுகள் பயன்படுத்தியிருப்பின், 310 ரூபா அறிவிடப்பட்ட நிலையில், திருத்தங்களின் பிரகாரம் புதிய கட்டணமாக 705 ரூபா அறவிடப்படவுள்ளது.

கடந்த காலங்களில் நாளொன்றில் 500 லிட்டர் நீரை பயன்படுத்தும் வீட்டு பாவனையாளர்களுக்கு நாளொன்றுக்கு 10 ரூபா அறவிடப்பட்ட போதிலும், புதிய திருத்தத்தில் நாளொன்றுக்கு 23 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

மத வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகளுக்கான நீர் கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

சமுர்த்தி பயனாளர்கள், தோட்ட குடியிருப்பாளர்களின் நீர் பாவனை கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்ற போதிலும், சேவைக் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 100 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

‘சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் தோட்டக் குடியிருப்பாளர்கள் அல்லாத’ மற்றும் ‘சமுர்த்தி பெறுநர்கள் அல்லாத தோட்டக் குடியிருப்பாளர்கள்’ என வீட்டுப்பாவனைக்கான பாவனையாளர் தொகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, சமுர்த்தி பெறுநர்களின் பாவனை 75 அலகுகளுக்கு மேல் காணப்படுமாயின், ஒரு அலகுக்கு 140 ரூபாவும், சேவைக் கட்டணமாக 1600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் தோட்டக்குடியிருப்பாளர்கள் அல்லாத பாவனையாளர்கள், 75 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தியிருப்பின், பாவனைக் கட்டணமாக ஒரு அலகுக்கு 245 ரூபாவும் மாதாந்த சேவைக் கட்டணமாக 3500 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பெறுநர்கள் அல்லாத தோட்டக் குடியிருப்பாளர்களுக்கு 75 அலகுகளுக்கு மேல், அலகொன்றுக்கு 140 ரூபாவும் சேவைக் கட்டணமாக 1600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

பொதுநீர் குழாய்கள் மற்றும் பூங்கா நீர் குழாய்களில் பாவனை அலகு 201 அலகுகளுக்கு மேல் காணப்படுமாயின், அலகொன்றுக்கு 15 ரூபாவும் மாதாந்த சேவைக் கட்டணமாக 2500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

அரச பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்களில் 75-க்கும் மேற்பட்ட பாவனை அலகுக்கு, அலகொன்றுக்கு 16 ரூபாவும் மாதாந்த சேவைக் கட்டணமாக 1600 ரூபாவும் அறவிடப்படும் என அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலகுகளுக்கு அலகொன்றுக்கு 69 ரூபாவும் சேவைக் கட்டணமாக ஒரு இலட்சம் ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

வணிக நோக்குடன் இயங்கும் நிறுவனங்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் 20,000 அலகுகளுக்கு மேல் பாவனை இருப்பின், பாவனைக் கட்டணமாக 116 ரூபா அறவிடப்படுவதுடன், மாதாந்த சேவைக் கட்டணமாக 1,15,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

இதனை தவிர, புதிய சேவை இணைப்பொன்றை வழங்குவதற்கான செலவானது, பாவனையாளர்களிடமிருந்து அறவிடப்படும் என வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மாதத்தில் நீரை பயன்படுத்தாத பாவனையாளர்களுக்கு குறைந்த மாதாந்த சேவைக் கட்டணம் மற்றும் பெறுமதி சேர் வரி ஆகியன அறிவிடப்படும்.

அத்துடன், பாவனையாளர்கள் தமது பட்டியலுக்கான நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கழிவு நீர் அமைப்பிற்கான கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles