உயிரிழந்தது 2 ஆவது இடத்தை பிடித்த ‘பந்துல’ யானை!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த ‘பந்துல’ யானை உயிரிழந்துள்ளது.

இந்த யானை இறக்கும் போது 79 வயதானது என தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் நடவடிக்கை பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷனி தெரிவித்தார்.

1943ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் பிறந்த இந்த யானை தனது மூன்று வயதில் கூட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1949 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பந்துல யானை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 2 வது வயதான விலங்காகும் .

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் தற்போது வாழும் விலங்குகளில் மிகப் பழமையானது ராட்சத ஆமையே வயதான விலங்காகும். அதன் வயது 110 ஆண்டுகள்.

Related Articles

Latest Articles