தம்புத்தேகம தனியார் வங்கிக்கு முன்பாக 223 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜாங்கனை உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதான சந்தேக நபர் இன்று (செப்டம்பர் 27) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.










