ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கு மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு இலங்கை அரசாங்கம் இலங்கை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்தை வரவேற்ற ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், சர்வதேச அரங்கில் ஆசியாவிற்கு வலுவான பிரதிநிதித்துவம் தேவை என்றும் வலியுறுத்தினார்.










