’20’ இற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 39 மனுக்கள்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹுலும் உயர்நீதிமன்றத்தின் இன்று (28) மனு தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதனை சவாலுக்குட்படுத்தி தொடர்ச்சியாக மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுவருகின்றன.

இன்றைய தினம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்படி ’20’ இற்கு எதிராக கடந்த 23 ஆம் திகதி முதல் இன்றுவரை உயர்நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

20 இற்கு எதிரான மனுக்கள்மீதான பரீசிலனை நாளை (28) முதல் இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles