அருணாச்சலத்தில் பழங்குடியினரின் கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்த அமெரிக்கத் தூதரகம் இணையத்தளம்!

உலக சுற்றுலா தினத்தில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழங்குடியினரின் கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்த அமெரிக்க தூதரகம் இணையத்தளமொன்றை தொடங்கியுள்ளது

அமெரிக்காவும் இந்தியாவும் 75 ஆண்டுகால இருதரப்பு உறவைக் கொண்டாடும் நிலையில், ‘ஆசாதி கி அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அருணாச்சலப் பிரதேசத்தின் பழங்குடியினரின் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இந்தியாவில் உள்ள யுனைடெட் ஸ்டேட்ஸ் மிஷன் ஒரு இணையதளத்தை தொடங்கியுள்ளது.

இந்த இணையதளத்தை அமெரிக்க செயல் துணைத் தலைவர் பிரையன் ஹீத் (Brian Heath) தொடங்கி வைத்தார், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர், இந்த திட்டம், வடகிழக்கு இந்தியாவில் உள்ள பழங்குடியினரின் 3000 ஆண்டுகள் பழமையான கலாச்சார மற்றும் வாழ்க்கை முறை மரபுகள், இந்தியாவின் வளமான கலாச்சாரம், சமூகம் மற்றும் வரலாற்றின் முக்கிய அம்சங்களை பாதுகாக்கிறது. சமூகங்களின் இன்றைய நிலை உருவாக்குவதற்கு கதைகள் மற்றும் அனுபவங்களை முன்னிலைப்படுத்துவது முக்கியம்.

“இந்த மாநிலத்திற்குச் செல்வதற்கு எனக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்காதபோதும், நான் இந்தியாவில் இருக்கும் போது நிச்சயமாக அங்கு செல்வேன் என்று நம்புகிறேன். பழங்குடியினரின் பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கை முறைகளையும் ஆன்மீகத்தையும் இயற்கையுடன் இணைக்கின்ற இந்த மாநிலத்தின் இயற்கை அதிசயத்தைப் பார்க்கும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது. காலநிலை நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் அளவிடுவதற்கும் பழங்குடி மக்கள் எவ்வாறான அறிவையும் நடைமுறைகளையும் கொண்டுள்ளனர் என்பதை இது நினைவூட்டுகிறது” என்று ஹீத் கூறினார்.

“கலாச்சார பாதுகாப்புக்கான அமெரிக்க தூதர்கள் நிதியம் (AFCP – Ambassadors Fund for Cultural Preservation) வரலாற்று கட்டடங்கள், தொல்பொருள் தளங்கள், இனவியல் பொருள்கள், ஓவியங்கள், கையெழுத்துப் பிரதிகள், பழங்குடி மொழிகள், பாரம்பரிய கலாச்சார வெளிப்பாட்டின் பிற வடிவங்கள் உட்பட ஒரு நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை ஆதரிக்கிறது. இந்த திட்டம், வடகிழக்கு இந்தியாவில் உள்ள பழங்குடியினரின் 3000 ஆண்டு பழமையான கலாச்சார மற்றும் வாழ்க்கை முறை மரபுகளின் ஆவணம், இந்தியாவின் வளமான கலாச்சாரம், சமூகம் மற்றும் வரலாற்றின் முக்கிய அம்சங்களை பாதுகாக்கிறது. இந்தியாவில் உள்ள பல முக்கியமான நிதி திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

பழங்குடியினரின் முக்கியத்துவத்தை மேலும் ஒப்புக்கொண்டு, பொறுப்பான சுற்றுலாவை உருவாக்கி, மறைக்கப்பட்ட உலகத்துடன் இணைத்து, அருணாச்சலத்திற்கு அதனை அறிமுகப்படுத்துவதில், இந்தத் திட்டம் அவர்களுக்கு எப்படி குரல் கொடுக்கிறது என்பதை அமெரிக்க செயல் துணைத் தூதுவர் மேலும் எடுத்துக்காட்டினார்.

அருணாச்சலப் பிரதேசத்தை கழிவுகள் இல்லாத மாநிலம் என்று பாராட்டிய, ​​கிழக்கு வடகிழக்கு இந்திய சுற்றுலாத்துறையின் துணை இயக்குநர் ஜெனரலும் பிராந்திய இயக்குநருமான டாக்டர் சாக்னிக் சவுத்ரி, உலக சுற்றுலா தினத்தில் அருணாச்சலத்தை அர்த்தமுள்ள வகையில் காட்சிப்படுத்துவது பெரும் பெருமையை அளிக்கிறது என்று கூறினார்.

கழிவுகள் இல்லாத மாநிலமான அருணாச்சலப் பிரதேசம், ‘சுற்றுலாவை மறுபரிசீலனை செய்வதற்கான’ உண்மையான சாத்தியத்தை பிரதிபலிப்பதோடு, அவர்களின் கலாச்சாரத்தை சிறப்பித்துக் காட்டி, மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது உறுதி என்றும், இதையொட்டி அந்த சமூகங்கள் பெரிதும் பயனடைகின்றன” என்றும் அவர் மேலும் கூறினார்.

கலாசாரப் பாதுகாப்புக்கான அமெரிக்க தூதுவர்கள் நிதியம், சுற்றுலா அமைச்சகம் மற்றும் யுனெஸ்கோவின் சர்வதேச தகவல் மற்றும் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள அருவ கலாச்சார பாரம்பரியத்திற்கான சர்வதேச தகவல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் இந்த திட்டத்தில் பாரம்பரிய அருணாச்சல பிரதேசத்தை வெளிப்படுத்தும் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை அடங்கும்.

Related Articles

Latest Articles