படகு கவிழ்ந்ததில் ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, தாந்தமலையில் படகு ஒன்று மூழ்கியதில் பாடசாலை மாணவர்கள் மூவரும், கல்வி ஆசிரியர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (12) பிற்பகல் நீரில் மூழ்கிய மூன்று மாணவர்களைக் காப்பாற்ற ஆசிரியர் முயற்சித்துள்ளார்.

16 வயது குழந்தைகளும் 27 வயதுடைய ஆசிரியையும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

நீரில் மூழ்கிய ஆசிரியர் மற்றும் மாணவர்களை பிரதேசவாசிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மூன்று ஆசிரியர்களும் 11 மாணவர்களும் இன்று அப்பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

மூன்று மாணவர்களும் ஒரு பாழடைந்த படகில் ஏறி பயணத்தின் நடுவில் படகு மூழ்கத் தொடங்கியது.

Related Articles

Latest Articles